vendredi 3 juillet 2009

vijay gallery


mercredi 1 juillet 2009

உலக பாப் சூப்பர் ஷ்டார் மைக்கல் ஜக்சன் மரணம்!!! கண்ணீர் அஞ்சலி.

Vijay 35th Birthday Celebration: விஜயின் ரசிகர்களாக இருக்க இன்று நாங்கள் பெருமைபடுகிறோம்.

50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார?

தொல்பொருள் ஆராய்ச்சியெல்லாம்கூட ரொம்ப சுலபம்தான். விஜய்யின் 50-வது பட இயக்குனர் யார்? என்று ரசிகர்கள் துளைத்தெடுத்த
கேள்விக்கு விடை கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமாக படவில்லை. விஜய்யின் 49-வது படமான 'வேட்டைக்காரனை' இயக்கிவருகிறார் பாபுசிவன். இவரைப்பற்றி எந்த மீடியாவும் கண்டு கொள்ளாத நிலையில் 50-வது படத்தை இயக்கப்போவது யாரென்ற ஆர்வமே ரசிகர்களிடமும் மீடியாக்களிடமும் இருந்தது. பிறந்தநாள் பிரஸ்மீட்டில்கூட இதுபற்றி . 'முறைப்படியாக அறிவிப்பு வெளிவரும்வரை காத்திருங்கள்' என்றார் விஜய். யாரும் காதில் வாங்குவதாயில்லை. 50-வது படத்தை இயக்கப்போவது எஸ்.பி.ராஜ்குமார். 'பொன்மனம்' உள்ளிட்ட பிரபு படங்கள் சிலவற்றை இயக்கிய இவர், தற்போது ஆர்.கே.நடிக்கும் 'அழகர் மலை' படத்தை இயக்கியுள்ளார். 50-வது படத்துக்கு அனேகமாக 'உரிமைக்குரல்' பெயர் சூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஜோடியாக தமன்னா நடிக்க, மீண்டும் விஜய்யுடன் கைக்கோர்க்கிறார் வடிவேலு. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும், நட்சத்திர தேர்வும் நடந்துவரும் இப்படத்தை சங்கிலிமுருகனின் முருகன் சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.

lundi 22 juin 2009

இன்று விஜய் பிறந்த நாள்,விஜயின் அற்புத நற்பணிகளும், திரண்டிருந்த பல கோடி மக்களும்

click here for more birthday gallery http://www.behindwoods.com/hindi-tamil-galleries/vijay-birthday/index.html
தமிழ் திரையுலகில் இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கு இன்று 36-வது பிறந்தநாள்.
இந்த பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்விப் பயிற்சி மையங்களைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய். அடுத்த ஆண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் இயக்கத்துக்கு அச்சாரமாக இந்த நற்பணிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மற்றும் சாலிகிராமம் அருணாச்சலா சாலையில் இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார் விஜய். இவை தவிர தமிழகம் முழுவதிலும் இது போன்ற கல்வி மையங்களைத் திறக்கவிருப்பதாகவும் கூறினார் விஜய். பின்னர் வடபழனியில் உள்ள அவரது ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை விஜய் தொடங்கி வைத்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். விழாவில் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். பிறந்த நாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்த விஜய் பல்வேறு உதவிகளை வழங்கினார். வடபழனி முருகன் கோயில் அருகில் ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். லிட்டில் பிளவர் பள்ளி, மெர்சி ஹோம், ஸ்மாஸ்டிக்சொசைட்டி போன்றவற்றில் விஜய் மதிய உணவு வழங்கினார். வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் முழுக்க விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியும், 'நாளைய முதல்வர் விஜய்' என வர்ணித்தும் பேனர்கள், விஜய் மன்ற கொடிகள் மற்றும் போஸ்டர்கள் மயமாகவே இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு தனது கல்யாண மண்டப பால்கனியில் நின்றபடி டாட்டா காட்டினார் விஜய்!

மக்களுக்காக போராடுவேன்! பிறந்த நாளில் விஜய் அதிரடி!! அதிரடி!!


எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருட பிறந்த நாள் கொஞ்சம் விசேஷம்தான் விஜய்க்கு! அரசியல் துறுதுறுப்புகள் ஒருபக்கம். அதிரடி 50 வது படம் மறுபக்கம் என இந்த பிறந்த நாளில் கேள்வி கேட்க ஏராளமான விஷயங்களோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளைய தளபதி.

பல வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடியிருக்கேன். ஆனால் இந்த வருஷம் ஸ்பெஷல். எப்படின்னா, கல்விக்காக இலவசமா கம்ப்யூட்டர் கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன். அது நடந்திருக்கு. எங்களோட கல்யாண மண்டபத்தை இப்போ பார்த்தால், ஏதோ மினி ஆஸ்பிடல் மாதிரி இருக்கு. செட்டிநாடு எல் சென்ட்டர் இலவச மருத்துவ முகாமை எங்க ரசிகர் மன்றத்தோட சேர்ந்து இங்கே நடத்துறாங்க. என்னோட ரசிகர்கள் கஷ்டப்பட்டு இதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க என்றவர் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க துவங்கினார்.

வேட்டைக்காரன் பற்றி சொல்லுங்க?

படம் 75 சதவீதம் முடிஞ்சிருக்கு. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும். என்னோட 50 வது படத்தை பற்றி கேட்கிறாங்க. இந்த படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். யார் இயக்குனர்? யார் ஹீரோயின் என்பதெல்லாம் வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகு முறைப்படி அறிவிப்பேன். அதுவரைக்கும் பொறுத்துக்கோங்க.

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதா ஒரு பேச்சிருக்கே?

ரசிகர்கள் தங்களோட சக்திக்கு மீறி பல நல்ல விஷயங்கள் செஞ்சிட்டு வர்றாங்க. அவங்களோட விருப்பம் நான் அரசியலுக்கு வரணும்னு இருக்கு. இது குறித்து நான் ஆலோசனை செஞ்சது உண்மைதான். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ரசிகர்களோட மட்டுமில்லே, மக்களோடவும் கலந்து பேசியிருக்கேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே ரசிகர்களோட கருத்துக்கும் எனக்கும் முரண்பாடு இருக்கு. இருந்தாலும், இப்போதைக்கு இதை மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கலாம் என்று முடிவு செஞ்சிருக்கோம்.

உங்கள் ரசிகர்களை இனி தொண்டர்கள் என்று அழைக்கலாமா?

அவங்க எப்பவோ தொண்டர்களா மாறிட்டாங்க.

அரசியலுக்கு வரப்போறதா முடிவு பண்ணிட்டீங்க. பொது பிரச்சனைகளுக்காக போராடுவீர்களா?

கண்டிப்பாக தொண்டர்களோட சேர்ந்து நானும் போராட்டத்திலே முன்னாடி நிப்பேன்!

கட்சி ஆரம்பிக்கிறது சம்பந்தமா மிரட்டல், பாராட்டுகள் வந்ததா?

மற்றவங்க மிரட்டுற அளவுக்கு நான் ஒண்ணும் சீன் போடலியே?

இவ்வாறு பதிலளித்த விஜய், வடபழனி கோவிலில் 500 ஏழைகளுக்கு அன்னதானம் போட அவசரம் அவசரமாக புறப்பட்டார். பசிக்கிற போதே சோறு போடுறதுதானே நல்ல தலைவனுக்கு அழகு!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளயதளபதி S.A.C Dr விஜய்



happy birthday friend
imikimi - Customize Your World!

HAPPY BIRTHDAY
imikimi - Customize Your World!